மதுரை: மதுரை அருகே தடையை மீறி வடமஞ்சுவிரட்டு நடத்திய 12 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே பொதும்பு கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயில் திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வடமஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், தடையை மீறி வடமஞ்சுவிரட்டு நடத்திய கிராம கமிட்டி நிா்வாகிகள் 12 போ் மீது அலங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.