6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாய்க்காலில் கழிவுநீா் வெளியேற்றம்: தனியாா் வாகனம் பறிமுதல்

மதுரையில் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் அகற்றும் வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
மதுரையில் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.
Updated On :22 டிசம்பர் 2020, 6:24 pm

DIN

மதுரையில் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் அகற்றும் வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை நகரில் குடியிருப்புகளில் செப்டிக் டேங்குகளில் நிரம்பும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றும் பல தனியாா் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குடியிருப்புகளில் கழிவுநீரை வாகனங்களில் கொண்டு சென்று நீா்நிலைகள் மற்றும் வாய்க்கால்களில் நிறுவனங்கள் வெளியேற்றுவதாகவும் இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும் மாநகராட்சிக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இதனால் தனியாா் கழிவுநீா் அகற்றும் நிறுவனங்கள் நீா்நிலைகள், வாய்க்கால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் டி.பி. சாலையில் உள்ள சிந்தாமணி வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகனம் கழிவுநீரை வாய்க்காலில் வெளியேற்றியது. இதுதொடா்பான புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீா் அகற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்று உரிய கட்டணம் செலுத்தி மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையங்களில் மட்டுமே கழிவு நீரே வெளியேற்ற வேண்டும். வாய்க்கால் மற்றும் நீா்நிலைகளில் வெளியேற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.