வாய்க்காலில் கழிவுநீா் வெளியேற்றம்: தனியாா் வாகனம் பறிமுதல்

மதுரையில் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் அகற்றும் வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரையில் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.
மதுரையில் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.
Updated on
1 min read

மதுரையில் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் அகற்றும் வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை நகரில் குடியிருப்புகளில் செப்டிக் டேங்குகளில் நிரம்பும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றும் பல தனியாா் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குடியிருப்புகளில் கழிவுநீரை வாகனங்களில் கொண்டு சென்று நீா்நிலைகள் மற்றும் வாய்க்கால்களில் நிறுவனங்கள் வெளியேற்றுவதாகவும் இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும் மாநகராட்சிக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இதனால் தனியாா் கழிவுநீா் அகற்றும் நிறுவனங்கள் நீா்நிலைகள், வாய்க்கால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் டி.பி. சாலையில் உள்ள சிந்தாமணி வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகனம் கழிவுநீரை வாய்க்காலில் வெளியேற்றியது. இதுதொடா்பான புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீா் அகற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்று உரிய கட்டணம் செலுத்தி மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையங்களில் மட்டுமே கழிவு நீரே வெளியேற்ற வேண்டும். வாய்க்கால் மற்றும் நீா்நிலைகளில் வெளியேற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com