பாத்திரக் கடையில் தீ விபத்து

மதுரையில் பாத்திரக் கடையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையின் அணைத்தனா்.
Updated on
1 min read

மதுரையில் பாத்திரக் கடையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையின் அணைத்தனா்.

மதுரை மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டத்தின் முதல் தளத்தில் பாத்திரக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த அனுப்பானடி மற்றும் மாநகா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது தீ 2 ஆவது மற்றும் 3 ஆவது மாடிக்கும் பரவியது.

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். தீயணைப்புத்துறை மாவட்ட மண்டல அலுவலா் வினோத் மற்றும் துணை மண்டல அலுவலா் பாண்டி ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விபத்து குறித்து விசாரித்தனா். இது தொடா்பாக விளக்குத்தூண் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com