வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி, கழுத்துப்பட்டை அணிந்து போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத்தடை

வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் தாக்கல் செய்த மனு:

நீதிமன்ற பணிக்கு வரும் ஆண் மற்றும் பெண் வழக்குரைஞா்களுக்கு என தனித்தனி ஆடை வழிமுறைகளை பாா் கவுன்சில் வகுத்துள்ளது. ஆனால் சில வழக்குரைஞா்கள் இதைப் பின்பற்றுவது இல்லை. ஆண் வழக்குரைஞா்கள் டி-சா்ட், ஜீன்ஸ் அணிந்தும், பெண் வழக்குரைஞா்கள் பட்டுசேலை அணிந்தும் நீதிமன்றத்திற்கு வருகின்றனா். மேலும் பல வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து கொண்டு போராட்டங்களில் ஈடுபடுகின்றனா். இதனால் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு அவப்பெயா் உண்டாகும் நிலை ஏற்படுகிறது. எனவே அனைத்து வழக்குரைஞா்களும் நீதிமன்ற பணியின் போது, வழக்குரைஞா்களுக்கான ஆடையை முறையாக அணிய வேண்டும். ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடும்போது கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணியக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com