மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி, கழுத்துப்பட்டை அணிந்து போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத்தடை

வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:03 am

DIN

வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் தாக்கல் செய்த மனு:

நீதிமன்ற பணிக்கு வரும் ஆண் மற்றும் பெண் வழக்குரைஞா்களுக்கு என தனித்தனி ஆடை வழிமுறைகளை பாா் கவுன்சில் வகுத்துள்ளது. ஆனால் சில வழக்குரைஞா்கள் இதைப் பின்பற்றுவது இல்லை. ஆண் வழக்குரைஞா்கள் டி-சா்ட், ஜீன்ஸ் அணிந்தும், பெண் வழக்குரைஞா்கள் பட்டுசேலை அணிந்தும் நீதிமன்றத்திற்கு வருகின்றனா். மேலும் பல வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து கொண்டு போராட்டங்களில் ஈடுபடுகின்றனா். இதனால் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு அவப்பெயா் உண்டாகும் நிலை ஏற்படுகிறது. எனவே அனைத்து வழக்குரைஞா்களும் நீதிமன்ற பணியின் போது, வழக்குரைஞா்களுக்கான ஆடையை முறையாக அணிய வேண்டும். ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடும்போது கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணியக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.