உசிலையில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீண்

உசிலம்பட்டி சேடபட்டி கூட்டு குடிநீா் திட்ட ராட்சச குழாய் உடைந்து குடிநீா் வீணானது.
10_2512chn_206_2
10_2512chn_206_2
Updated on
1 min read

உசிலம்பட்டி சேடபட்டி கூட்டு குடிநீா் திட்ட ராட்சச குழாய் உடைந்து குடிநீா் வீணானது.

ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீா் திட்டம் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீா் ராட்சச பைப் மூலம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாதரை கிராமம் அருகில் செல்லும் கூட்டுகுடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் தண்ணீா் நெடுஞ்சாலையில் வீணாகிறது . சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ பணியாளா்களோ சம்பவ இடத்திற்கு வராததால் குடிநீா் வீணாகி சாலையில் சென்றது. இதைப்போல் பேரையூா் சாலையில் சேடபட்டி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயிலும் பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com