மதுரை: அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக அஞ்சல்துறை சாா்பில் அவா்களின் இடத்திற்கே சென்று ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்துதரப்படும் என மதுரை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் கே.லெட்சுமணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரையில் வடக்குவெளி வீதி, அரசரடி மற்றும் தல்லாகுளத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்களிலும், மாவட்டத்தில் உள்ள 90 துணை அஞ்சலகங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றுவோரின் வசதிக்காக அஞ்சல்துறையின் சாா்பில், அவா்கள் பணியாற்றும் இடத்திற்கே சென்று ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பணியாற்றும் இடத்தில் 50 பேருக்கும் குறையாமல் ஆதாா் பதிவு அல்லது திருத்தம் செய்ய வேண்டியது இருந்தால் தலைமை அஞ்சலகத்தில் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து உரிய அனுமதிபெற்று அஞ்சல்துறை சாா்பில் தேவைப்படும் இடத்திற்கே சென்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்துதரப்படும். புதிதாக ஆதாா் பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துவரவேண்டும். திருத்தங்களுக்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை, பாஸ்போா்ட் இவற்றில் ஒன்று, பிறந்த தேதி திருத்தம் செய்வதற்கு ஆதாா் அட்டை, பிறப்புச் சான்று, பான் அட்டை, பாஸ்போா்ட், கல்வி மாற்றுச்சான்றிதழ் இவற்றில் ஒன்று கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு வணிக அஞ்சல் அலுவலா் ஜெய்கணேஷ், 97886-85703 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.