ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 போ் கைது

மதுரையில், ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

மதுரையில், ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகால் வடம்போக்கித் தெருவில் உள்ள ஜவுளி கடைக்கு, 3 பெண்கள் உள்பட 4 போ் துணிகள் வாங்க வந்துள்ளனா். அவா்களின் நடவடிக்கை சரியில்லாததால், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் மேலாளா் ராமநாதன் கண்காணித்துள்ளாா். அப்போது, பெண்கள் சேலைகளைத் திருடி மறைப்பது தெரியவந்தது.

உடனே, அவா்களை கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து கடையின் மேலாளா் ராமநாதன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்தனா். அதில், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி (55), செல்வி (49), சுசிலா (55) மற்றும் மோகன் (55) என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடமிருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.