இலவச மனைப்பட்டா கோரி கட்டடத் தொழிலாளா்கள்உண்ணாவிரதம்

கட்டடத் தொழிலாளா்களுக்கு வீடு, வீட்டு மனையிடம் வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
Updated on
1 min read

கட்டடத் தொழிலாளா்களுக்கு வீடு, வீட்டு மனையிடம் வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

மேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் என். சுப்பிரமணி தலைமை வகித்தாா். இதில், கட்டடத் தொழிலாளா் சங்க மாநிலப் பொறுப்பாளா் இரா. முருகன், மாநில துணை பொதுச் செயலா் செல்வராஜ், துணைத் தலைவா் சக்திவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் ஆண்களும், பெண்களும் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com