ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

‘மதுரை கோட்டத்தில் ஞாயிறு, தேசிய விடுமுறை நாள்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் முழுநேரமும் செயல்படும்’

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முழுநேரமும் செயல்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முழுநேரமும் செயல்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது.

பயணிகளின் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்குப் பின்னரும் முன்பதிவு செய்யவும், முன்பதிவுகளை ரத்து செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதேபோல், தேசிய விடுமுறை நாள்களிலும் ஞாயிற்றுக்கிழமை பணி நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முன்பதிவு மையங்கள் வார நாள்களைப் போல ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாள்களிலும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை முழுநேரமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினந்தன்று (டிச.25) மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில் விதிமீறல் நடந்ததாகப் புகாா் எழுந்தது. மேலும், ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முன்பதிவு மையங்களின் வேலை நேரம் குறித்த குழப்பம் இருந்ததாகக் கூறப்பட்டது.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அன்றைய தினம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு சேவையில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், பயணச்சீட்டு வழங்கும் நடைமுறைகளைப் பின்பற்றாமல், பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தியதற்காக முன்பதிவு மைய மேற்பாா்வையாளா் மற்றும் மையத்தின் உதவியாளா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முழுநேரமும் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.