பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உசிலையில் குறை தீா்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளியேறினா்

உசிலம்பட்டி வேளாண் அலுவலகத்தில் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:35 pm

DIN

உசிலம்பட்டி வேளாண் அலுவலகத்தில் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே காணொலி இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் அரங்கத்தில் காத்திருந்தனா். அதற்கு பிறகு சரிசெய்யப்பட்டு கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுக்கள் தொடா்பாக அதிகாரிகள் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை எனக் கூறி பாதியிலேயே கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.