மேலூா்: மேலூா் சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை மாலை சுமாா் 1 மணி நேர மழை பெய்தது.
மேலூா் சுற்றுவட்டாரத்தில் நான்காவது நாளாக அழகா்கோவில், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது.
ஆடிப்பட்டத்தில் புன்செய் சாகுபடிப் பகுதிகளில் உழவுப் பணிகளைத் தொடங்க இம்மழை பெரிதும் உதவும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.