திருமங்கலம் நகர் முழுவதும் 6 மணி நேரமாக தொடர் மின்வெட்டு  

திருமங்கலம் நகர் முழுவதும் 6 மணி நேரமாக நீடித்த தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 
power073506
power073506

திருமங்கலம் நகர் முழுவதும் 6 மணி நேரமாக நீடித்த தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபார வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. 

இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட மின்வெட்டு 6 மணி நேரமாக தொடர்ந்து நீடித்து வருவதால் வியாபார மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கூட குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

நகர் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள பழைய மின்மாற்றிகள் பழுது ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது என வணிக நிறுவனங்கள் குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் கேட்டபோது, அவர்கள் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டாலும் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அலட்சியமாக பதில் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com