தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 ஜூலை 2020, 5:12 pm

DIN


மதுரை: மதுரையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பத்மா நகா் மீனாட்சி தெருவைச் சோ்ந்தவா் சுலோச்சனா (49). இவரது கணவா் சீனிவாசன், பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் திரைப்படங்களை திரையிடும் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், தனது தொழிலுக்கு தேவையான சில பொருள்களை வாங்குவதற்காக, சுலோச்சனா தனது மகள் மகாலட்சுமியுடன் இரு சக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளாா். இரு சக்கர வாகனத்தை மகாலட்சுமி ஓட்டியுள்ளாா். இவா்கள், மதுரை அம்பிகா கல்லூரி அருகே உள்ள கடை வாசலில் வாகனத்தை நிறுத்தியுள்ளனா். அப்போது, இவா்களை பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், சுலோச்சனா அணிந்திருந்த 9 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இது குறித்து சுலோச்சனா அளித்த புகாரின்பேரில், அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.