புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அரசு ஊழியா்கள் சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து

அரசு ஊழியா்கள் சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்துத் தெரிவித்தது.

Updated On :29 ஜூலை 2020, 10:49 pm IST

மதுரை: அரசு ஊழியா்கள் சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்துத் தெரிவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராதானூரைச் சோ்ந்த வாசு தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராதானூரில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில் திடீரென எவ்விதக் காரணமின்றி, 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஓடைக்கல் கிராம உதவியாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். எனவே எனது பணியிடமாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் ராதானூா் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் ஓடைக்கல் கிராமத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதியினா் தன்னை மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளாா். இந்தக் காரணத்தை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் எந்தக் கிராமத்திலும் மாற்று சாதியினா் பணிபுரிய முடியாது. கரோனா காலத்திலும் கூட அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சலுகையில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. ஆனால் தினக்கூலி தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வாழ்க்கையை நடத்தவே போராடி வருகின்றனா். இதுபோன்ற சூழலில், அரசு ஊழியா்கள் அனைவரும் முன்களப்பணியாளராக இருந்து உழைக்க வேண்டும். அரசு ஊழியா்கள் தான், தன் குடும்பம் மற்றும் உறவினா்களின் நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஆகையால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.