மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் புறப்பட்டது
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை-விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் 281 பயணிகளுடன் திங்கள்கிழமை புறப்பட்டது.


மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை-விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் 281 பயணிகளுடன் திங்கள்கிழமை புறப்பட்டது.
தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 70 நாள்களாக விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை-விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் 281 பயணிகளுடன் புறப்பட்டது.
முன்னதாக அனைத்து ரயில் பயணிகளும் முகக்கவசங்கள் அணிந்துள்ளனரா என உறுதிசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ரயில் பயணச்சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே ரயில் நிலையத்தினுள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு வரிசையாக ரயில் பெட்டியில் ஏறி அவரவர் இருக்கையில் அமரவைக்கப்பட்டனர்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால் மதுரை ரயில் நிலையம் வந்த பயணிகள் குழப்பதற்கு ஆளானார்கள். ஆனால் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், பயணிகள் குழப்பமடைய வேண்டாம் எனக் கூறி அனைவரையும் பயணிக்க அனுமதித்தனர்.

மொத்தம் 450 பேர் பயணம்: இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி. அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் மொத்தம் 450 பயணிகள் பயணித்தனர். காலை 7 மணிக்கு மதுரையில் புறப்பட்ட ரயில் பகல் 12 மணிக்கு விழுப்புரம் சென்றடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...