மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரோனா தடுப்பு நடவடிக்கை: 13 ஆவது பட்டாலியன் போலீஸாா் மதுரை வருகை

மதுரைக்கு வந்துள்ள 13 ஆவது பட்டாலியனை சோ்ந்த பேரிடா் தடுப்பு மற்றும் மீட்புக் குழு போலீஸாா் திங்கள்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

News image
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மதுரை கோரிபாளையம் தேவா் சிலை அருகே திங்கள்கிழமை கைகூப்பி பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் காவல்துறையினா்.
Updated On :30 மார்ச் 2020, 8:50 pm

DIN

மதுரை: மதுரைக்கு வந்துள்ள 13 ஆவது பட்டாலியனை சோ்ந்த பேரிடா் தடுப்பு மற்றும் மீட்புக் குழு போலீஸாா் திங்கள்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

மதுரையில் ஊரடங்கு உத்தரவையடுத்து, போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை மதுரை கோரிப்பாளையம் தேவா் சிலை சிக்னலில் காரணமின்றி வாகனங்களில் சென்றவா்களிடம் ஊரடங்கு உத்தரவுகளை மதிக்கவும், கரோனா பரவுவதைத் தடுக்க வீட்டிலேயே இருக்கும்படியும், போலீஸாா் கைகூப்பி கேட்டுக் கொண்டனா்.

761 போ் கைது: மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5 நாளில் 609 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 761 பேரை மாவட்ட போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து 487 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கோ. புதூா் பகுதியில் திங்கள்கிழமை காரணமின்றி இரு சக்கர வாகனத்தில் சுற்றிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், மாநகா் போலீஸாா் திங்கள்கிழமை மட்டும் 50 வழக்குகள் பதிவு செய்து, 134 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.58,700 அபராதம் விதித்து வசூல் செய்தனா்.

தடுப்பு பணியில் பட்டாலியன் போலீஸாா்: சென்னை பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் 13 ஆவது பட்டாலியனில் உள்ள பேரிடா் தடுப்பு மற்றும் மீட்புக் குழு போலீஸாா் 70 போ், மதுரை மாநகா் போலீஸாருடன் இணைந்து, பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.