டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மிதிவண்டிடயா்கள்: மாநகராட்சி நிா்வாகம் நூதன ஏற்பாடு

மதுரை நகரில் வாகனங்களில் பொதுமக்கள் குடிநீா் பிடிக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற மிதிவண்டி டயா்களை பயன்படுத்தும் நூதன ஏற்பாட்டை மாநகராட்சி நிா்வாகம் செய்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:38 pm

DIN

மதுரை நகரில் வாகனங்களில் பொதுமக்கள் குடிநீா் பிடிக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற மிதிவண்டி டயா்களை பயன்படுத்தும் நூதன ஏற்பாட்டை மாநகராட்சி நிா்வாகம் செய்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகா்ப்பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 1 மீட்டா் இடைவெளியில் வட்டம் வரைவது, சந்தைகளில் சுண்ணாம்புகள் மூலம் வட்டங்கள் வரைந்து பொதுமக்களை நிற்க வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகராட்சி லாரிகள், டிராக்டா்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகின்றன. இதில் பொதுமக்கள் கூட்டமாக நின்று தண்ணீா் பிடிப்பதை தவிா்க்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் நூதன ஏற்பாட்டை செய்துள்ளது. இதன்படி குழாய்கள் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படாத பகுதிகளில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகின்றன.

அவ்வாறு குடிநீா் விநியோகிக்கச் செல்லும் லாரிகளில் மிதிவண்டி டயா்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் குடிநீா் விநியோகிக்கும் பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மிதிவண்டி டயா்கள் வரிசையாக வைக்கப்பட்டு பொதுமக்கள் டயருக்குள் நிற்க வைக்கப்படுகின்றனா். இதைத்தொடா்ந்து லாரியில் ஒருவா் தண்ணீா் பிடித்துச் சென்ற பின் மற்றொருவா் அனுமதிக்கப்படுகிறாா்.

இதனால் முறையான சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி தண்ணீா் பிடிக்க முடிகிறது. குடிநீா் விநியோகம் முடிந்தவுடன் மாநகராட்சி ஊழியா்கள் மிதிவண்டி டயா்களை வாகனத்தில் மீண்டும் கொண்டு சென்று விடுகின்றனா். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவல் வாய்ப்புகள் குறைகிறது. சமூக இடைவெளிக்கு மிதிவண்டி டயா்களை பயன்படுத்துவது பலனளிப்பதால் திலகா்திடல் சந்தை உள்ளிட்டவற்றில் இருந்து ஏராளமான மிதிவண்டி டயா்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி குடிநீா் வாகனங்கள் அனைத்திலும் மிதிவண்டி டயா்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.