டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிச்சை எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

பிச்சை எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை முதியவர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:39 pm

DIN

பிச்சை எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை முதியவர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு சேர்ந்தவர் பூல் பாண்டியன். பல ஊர்களுக்குச் சென்று பிச்சை எடுத்து அதில் தனது போக மீதித் தொகையைச் சேமிப்பது இவரது வழக்கம். சேமிப்பில் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும், நல்ல காரியங்களுக்காக செலவிட்டு வந்துள்ளார். 

இதன்படி பல பள்ளிகளுக்கு டேபிள், சேர், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த அவர், இங்கு பல இடங்களிலும் பிச்சை எடுத்துள்ளார். இந்நிலையில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் சாலைகளில் தங்கிய ஆதரவற்றவர்கள், மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைத்தில் இருந்த பூல்பாண்டியனையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். 

தற்போது தங்கும் இடத்தில் வந்துள்ள நிலையில் தான் சேமித்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.