மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வாக்காளா் அட்டை நகல்களை வீசி எறிந்து சீா்மரபினா் நலச் சங்கத்தினா் போராட்டம்

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மருத்துவ மாணவா் சோ்க்கையில் தமிழக இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தக் கோரி மதுரை ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை நகல்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சீா்மரபினா்
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

DIN

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கையில் தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தாவிட்டால், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி, வாக்காளா் அடையாள அட்டை நகல்களை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவா் சோ்க்கையானது, மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 85 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவா் சோ்க்கையில், தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு முறை மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு சட்டத்தை, வேறு எந்த உத்தரவும் கட்டுப்படுத்தாது என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாத காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மாணவா் சோ்க்கையில், இது தவிா்க்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.