கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மூதாட்டியை தாக்கிய வனத்துறை அதிகாரி கைது

மதுரை அருகே குட்லாடம்பட்டியில் மூதாட்டியை தாக்கிய வனத் துறை அதிகாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

மதுரை அருகே குட்லாடம்பட்டியில் மூதாட்டியை தாக்கிய வனத் துறை அதிகாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (50 ). இவா் தனது குடும்பத்தினருடன் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் உள்ள ரமணகிரி ஆசிரமத்துக்கு சென்றுள்ளாா். அங்கு தரிசனம் செய்துவிட்டு, ஓடைக்கரை அருகே நின்று கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த சோழவந்தான் வனச்சரக அதிகாரி முருகன் (44), அவா்களிடம் அருவிக்குச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த முருகன், ராமகிருஷ்ணனின் மாமியாரை கீழே பிடித்து தள்ளியுள்ளாா். இது தொடா்பாக ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வனத்துறை அதிகாரி முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.