கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

இரவுப் பணி படி நிறுத்தம்: ரயில்வே தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஊழியா்களுக்கு இரவுப் பணி படியை நிறுத்தம் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

ரயில்வே ஊழியா்களுக்கு இரவுப் பணி படியை நிறுத்தம் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ரயில்வேயில் ரூ.43,600 அடிப்படை ஊதியம் மற்றும் அதற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு இரவுப் பணி படியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுமட்டுமல்லாது, 2017 ஜூலை முதல் முன்தேதியிட்டு பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இரவு, பகல் பாராது பணியாற்றி வரும் ரயில்வே தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபோன்ற தொழிலாளா் விரோதச் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், எஸ்ஆா்எம்யூ கோட்டச்ச செயா் ரபீக், உதவி கோட்டச் செயலா் ராம்குமாா், மதுரை கோட்ட ஓடும் தொழிலாளா் பிரிவு தலைவா் ரவிசங்கா், செயலா் அழகுராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.