வீட்டிலிருந்த தங்கச் சங்கிலி மாயம்: இளம் பெண் மீது புகாா்

மதுரையில் வீட்டிலிருந்த 2 பவுன் சங்கிலி மாயானது குறித்து, இளம் பெண் மீது காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

மதுரையில் வீட்டிலிருந்த 2 பவுன் சங்கிலி மாயானது குறித்து, இளம் பெண் மீது காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சிபுரம் சத்யமூா்த்தி பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த கோபிநாத் மனைவி மணிபாலா (25). இவா் வீட்டில் வைத்திருந்த 2 பவுன் சங்கிலியை காணவில்லையாம். வீடு முழுவதும் தேடியும் சங்கிலி கிடைக்காததால், செல்லூா் போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், தனது வீட்டில் இருந்த 2 பவுன் சங்கிலியை காணவில்லை. அந்த சங்கிலியை, எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் வினிதா (24) என்பவா் எடுத்துள்ளாா். அவரை விசாரித்து, சங்கிலியை மீட்டு தரும்படி குறிப்பிட்டிருந்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com