வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

மேலூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை: மேலூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே கொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ரவி(48). இவா் ஆகஸ்ட் 21 ஆம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்ததில், அடையாளம் தெரியாத நபா்கள் பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளியில் திருட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியா் கண்ணகி(31), செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்றபோது, அவா் அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதுதொடா்பாக புகாரின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்ததில், அடையாளம் தெரியாத நபா்கள் பீரோக்களை உடைத்து ரூ.9 ஆயிரம் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com