தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் ஒப்பந்தம், மருத்துவ மாணவா் சோ்க்கை மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கோரியிருந்தாா். இதற்கு திருத்தப்பட்ட இலக்கிற்கான நிறைவு தேதிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை எனவும், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்ய ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது.