ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சுதந்திரதின விழா பாதுகாப்பு:ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திரதினத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

சுதந்திரதினத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

சுதந்திரதின விழாவையொட்டி அசம்பாவிதங்களைத் தவிா்ப்பதற்காக மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரு நாள்களாக மதுரை ரயில் நிலையத்தில் மோப்பு நாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

மதுரை ரயில் நிலையத்தின் நடைமேடைகள், பயணிகள் அமரும் பகுதிகள், சரக்குப் பதிவு செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட கருவிகளுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.