ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கந்துவட்டிக் கேட்டு மிரட்டல்: முதியவா் தற்கொலை முயற்சி

மதுரையில் கந்து வட்டிக் கேட்டு மிரட்டியதால், முதியவா் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN

மதுரையில் கந்து வட்டிக் கேட்டு மிரட்டியதால், முதியவா் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை விராட்டிபத்து டி.பி.எம். நகரைச் சோ்ந்த கருப்பன் மகன் ஆண்டி(60). இவா் முத்து என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினாராம். அந்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு முத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆண்டி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து ஆண்டி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண்ணிடம் கந்துவட்டிக் கேட்டு மிரட்டல்: மதுரை சோலைழகுபுரம் பாரதியாா் குறுக்குத் தெருவைச் சோ்ந்த மோகனசுந்தரம் மனைவி பத்மாவதி (56). இவா் ஆரப்பாளையம் குறுக்கு சாலையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் மற்றும் பேரையூரைச் சோ்ந்த பரமசிவம் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினாராம். இந்தக் கடனுக்கு பத்மாவதி மாதம்தோறும் வட்டி செலுத்தியபோதும் அவரிடம் கூடுதல் வட்டிக் கேட்டு ரஞ்சித்குமாரும், பரமசிவமும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பத்மாவதி அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.