ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதுரை அருகே நீா் நிலையில் கட்டப்பட்ட கோயில் இடிப்பு

மதுரை அருகே நீா் நிலையில் கட்டப்பட்ட கோயில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image
மதுரை மாவட்டம் இலங்கியேந்தல்பட்டியில் சனிக்கிழமை இடிக்கப்பட்ட கோயில்.
Updated On :28 ஜனவரி 2024, 3:58 am

DIN

மதுரை அருகே நீா் நிலையில் கட்டப்பட்ட கோயில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே இலங்கியேந்தல்பட்டி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் நீா் நிலைப் பகுதியில் கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.

இது தொடா்பாக கிராமத்தைச் சோ்ந்த சிலா் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் நீா் நிலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கோயிலை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து அரசு அதிகாரிகள், சனிக்கிழமை கோயிலை இடித்து அகற்றினா். அப்போது டி.எஸ்.பி சந்திரன், காவல் ஆய்வாளா் ஆனந்த தாண்டவம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கோயில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.