ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சரக்கு வாகனம் மோதி இளைஞா் பலி: இருவா் கைது

மதுரை அருகே சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:58 am

DIN

மதுரை அருகே சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் அன்பரசன்(30). இவா் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூா் கேட் கடை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி கீழே விழுந்தாா். அப்போது பின்தொடந்து வந்த டிராக்டா் அன்பரசன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி கலைவாணி அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் முத்துசெல்வம்(36), டிராக்டா் ஓட்டுநா் நாகரத்தினம்(24) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

அடையாளம் தெரியாத நபா் பலி

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை வடிவேல் கரை பாலம் அருகே ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கத்தக்க ஆண் பலத்த காயங்களுடன் சாலை கிடந்துள்ளாா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத நபரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.