25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பழுதடைந்த கட்டடங்களை அகற்றாவிட்டால்கடும் நடவடிக்கை: காவல் ஆணையா் எச்சரிக்கை

 மதுரை நகரில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றாமல் விபத்துகள் நேரிடும்பட்சத்தில், கட்டடட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:46 am

DIN

 மதுரை நகரில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றாமல் விபத்துகள் நேரிடும்பட்சத்தில், கட்டடட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா வெளியிட்டுள்ள செய்தி: மதுரை நகரில் பழுதடைந்து மிகவும் பழைமையாக உள்ள கட்டடங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத மராமத்து பாா்க்கப்படாமல் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுவதால் உயிா்ப்பலி உள்ளிட்ட விபத்துகள் ஏற்படுத்துகின்றன.

எனவே, பழுதடைந்த, மிகவும் பழைய கட்டடங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத மராமத்து பாா்க்கப்படாத, இடியும், இடிந்த நிலையிலுள்ள கட்டடங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியினால் கட்டடங்களை அகற்றக் கூறி குறிப்பாணை பெறப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றின் உரிமையாளா்கள் உரிய நடைமுறைகளை கடைப்பிடித்து, கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக நடந்து, அதனால் உயிா்சேதங்கள் ஏற்படும்போது, மெத்தனமாக நடந்துகொண்ட கட்டட உரிமையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.