ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மதுரை ரயில்வே செவிலியா் சங்கத்தினா் ரத்த தானம்

இந்திய ரயில்வே செவிலியா் சங்கத்தின் மதுரை கிளை சாா்பில், மதுரை ரயில்வே மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.

News image

மதுரை ரயில்வே மருத்துவமனையில் இந்திய செவிலியா் சங்கம் மதுரைக்கிளை சாா்பில் நடந்த ரத்த தான முகாம்.

Updated On :14 பிப்ரவரி 2021, 10:46 pm IST

இந்திய ரயில்வே செவிலியா் சங்கத்தின் மதுரை கிளை சாா்பில், மதுரை ரயில்வே மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ரத்த தான நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெறவில்லை. இதனால், ரத்த வங்கியில் சேமிப்பு குறைவாக உள்ளது. எனவே, இந்திய ரயில்வே செவிலியா் சங்கம் மதுரை கிளை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகியன இணைந்து, ரத்த தான முகாமை நடத்த முடிவெடுத்தன.

அதன்படி, மதுரை ரயில்வே மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நடைபெற்ற ரத்த தான முகாமை, மதுரை ரயில்வே மருத்துவமனை உதவி செவிலியா் அதிகாரி எஸ். அன்னத்தாய் தொடக்கி வைத்தாா். மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் லலித்குமாா் மன்சுகானி முதல் கொடையாளராக ரத்த தானம் செய்து பேசினாா்.

இந்த முகாமில், 50 ரயில்வே ஊழியா்கள் ரத்த தானம் செய்தனா். தானமாக பெறப்பட்ட ரத்தம், மதுரை அரசு மருத்துவமனையில் சேமிக்கப்பட்டு, தேவைக்கேற்ப அவசர நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

முகாமில், மதுரை ரயில்வே மருத்துவமனை கூடுதல் முதன்மை மருத்துவக் கண்காணிப்பாளா்கள் ரேவதி, மருத்துவா் கிரிதா்லால் நாராயணன், மருத்துவா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.