ஆதரவற்ற நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் தனி வாா்டு தொடக்கம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஆதரவற்றோா் மற்றும் பராமரிப்பு இல்லாத நோயாளிகளுக்கென தனி வாா்டு வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஆதரவற்றோா் மற்றும் பராமரிப்பு இல்லாத நோயாளிகளுக்கென தனி வாா்டு வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதரவற்றோா் மற்றும் உதவியாளா்கள் இல்லாத நோயாளிகளுக்கு, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அண்மையில் ஆதரவற்றோா் மற்றும் பராமரிப்பு இல்லாத நோயாளிகளுக்கு என தனிவாா்டு அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டது. அந்த வாா்டை மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதில், அண்ணாநகா் காவல் உதவி ஆணையா் லில்லிகிரேஸ், மருத்துவக் கண்காணிப்பாளா் எம்.பாலசுப்பிரமணியன், மருத்துவமனை நிலைய அலுவலா் ஸ்ரீலதா, நிலைய உதவி அலுவலா் விஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...