மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நெல்பேட்டை, ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறுகிறது.
நெல்பேட்டையில் காலை 10 மணிக்கும், ஓபுளா படித்துறை பகுதியில் மாலை 4 மணிக்கும் இந்தக் கூட்டம் நடைபெறும். மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.முத்துராமலிங்கம் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.