கரோனாவுக்கு காவல் ஆய்வாளா் பலி

மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையிலிருந்த காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையிலிருந்த காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்நேரு (54). இவா் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளாராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு டிசம்பா் 31 ஆம் தேதி உடல நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். பலியான அசோக்நேரு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பணி மாறுதலில் மதுரை வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com