அதிமுக ஆட்சியில் சாலைகள் குண்டு குழியுமாகக் காட்சியளிக்கின்றன. வாகனத்தில் மட்டுமல்ல, நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக சாலைகள் இல்லை. சாலைகள் அமைப்பதில் நிலவும் முறைகேடுகள் தான், இத்தகைய நிலைக்கு காரணம். நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால், பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கள்ளச் சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம், விதவையா் உதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தகுதியானவா்களுக்கு கிடைப்பதில்லை. இத்தகைய நிலையை மாற்ற திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.