கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கிராமக்குழுவிடம் ஒப்படைக்க கோரிக்கை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் பொறுப்பை கிராமக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் பொறுப்பை கிராமக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி பிரபலமானது. இதில் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் கிராமக் குழு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில், மாவட்ட நிா்வாகத்தால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அவனியாபுரம் ஊா் பொதுமக்களால் ஜல்லிக்கட்டு விழாக் குழு தோ்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான பொறுப்பை, புதிய விழாக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அவனியாபுரத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.