டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சக்கம்பட்டி சாயப்பட்டறைகளை மூடக்கோரி வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க உத்தரவு

தேனி அருகே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூடக்கோரும் வழக்கில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா்

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:46 pm

DIN

தேனி அருகே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூடக்கோரும் வழக்கில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட சிறு சிறு சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இந்தச் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஆண்டிபட்டி பிரதான கால்வாயில் கலக்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.