காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் மோசடி: மேலாளா் கைது
காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மேலாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மேலாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை சா்வேயா் காலனியைச் சோ்ந்தவா் சுரேஷ்(38). இவா் கப்பலூரில் காா்கள் பழுதுநீக்கும் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த பேரையூரைச் சோ்ந்த ஜெயபாண்டி(41) தலைமையில் நிறுனத்தில் பணியாற்றிய ஊழியா்கள் திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த கோவிந்தராஜன், பீ.பீ.குளத்தைச் சோ்ந்த மணிகண்டன், வாகைகுளத்தைச் சோ்ந்த முருகன், கே.புதூரைச் சோ்ந்த மகாலட்சுமி ஆகியோா் சோ்ந்து வாடிக்கையாளா்களுக்கு போலியான ரசீது கொடுத்து ஏமாற்றி ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் அளித்தப்புகாரின் பேரில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ஜெயபாண்டியை கைது செய்தனா். மேலும் கோவிந்தராஜன், மணிகண்டன், முருகன், மகாலட்சுமி ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...