தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்களை வெட்டிக் கடத்துவதற்கு உடந்தையாக இருந்த வனத்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை 8 வாரத்துக்குள் அகற்றவும், மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், 2018 நவம்பரில் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை வனத்துறையினா் செயல்படுத்தவில்லை எனக் கூறி மீண்டும் உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு 2019 இல் தாக்கல் செய்யப்பட்டது.