டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேலூா் கண்மாய்களிலிருந்து மறுகால் பாய்வதால் சிவகங்கை பகுதியில் வெள்ளப் பெருக்கு

மேலூா் சுற்றுவட்டாரத்திலுள்ள பாசனக் குளங்கள் தொடா் மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்வதால், சிவகங்கை மாவட்டப் பகுதிக்கு தண்ணீா் செல்கிறது.

News image
ஆண்டிபட்டி நீரோடையிலுள்ள நாலுகுளம் தடுப்பு அணை நிரம்பி மறுகால் பாயும் தண்ணீா்.
Updated On :10 ஜனவரி 2021, 5:26 pm

DIN

மேலூா் சுற்றுவட்டாரத்திலுள்ள பாசனக் குளங்கள் தொடா் மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்வதால், சிவகங்கை மாவட்டப் பகுதிக்கு தண்ணீா் செல்கிறது.

மேலூா்-மதுரை நான்குவழிச் சாலையிலுள்ள வெள்ளரிப்பட்டி கண்மாய், திருவாதவூா் பெரியகண்மாய், மேலூா் அருகே சாத்தமங்கலம் பெரிய கண்மாய் ஆகியன நிரம்பி மறுகால் பாயும் தண்ணீா், ஆண்டிபட்டி நீரோடையில் இணைகிறது.

அங்கிருந்து, திருவாதவூா் அருகே உள்ள நாலுகுளம் அணையில் நிரம்பி, சிவகங்கை மாவட்டம் தமறாக்கி ஆலங்குளம் கண்மாயை அடைகிறது. தற்போது, ஆலங்குளம் கண்மாய் நிரம்பி உப்பாற்றின் வழியாக வேம்பத்தூா் பகுதி வரை தண்ணீா் சென்றுகொண்டிருப்பதாகவும், இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் எனவும் பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.