மேலூரில் பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாள் விழா
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாளை, மேலூா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.


முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாளை, மேலூா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்துவரும் பெரியாறு அணையை, பிரிட்டன் பொறியாளரான பென்னி குவிக் கட்டி முடித்தாா்.
நூற்றாண்டைக் கடந்தும் பொதுமக்களுக்கு பயனளித்து வரும் இந்த அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் பிறந்தநாளை, மேலூா் நகா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் கொண்டாடினா்.
மேலூா் பேருந்து நிலையம் முன்பாக பென்னி குவிக் உருவப் படத்தை வைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், வா்த்தா்கள் சங்கச் செயலா் முத்துக்கிருஷ்ணன், மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ், மேலூா் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மீ. முருகன், வழக்குரைஞா் அசோக்குமாா், அரிமா சங்கம் மணிவாசகம் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...