சமத்துவப் பொங்கல் விழா மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பங்கேற்கிறாா்.
பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதறகாக திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு புதன்கிழமை வந்தாா். அவா் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு, அவனியாபுரம் சந்திப்பு பகுதியில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறாா். பின்னா் வில்லாபுரம் குடியிருப்புப் பகுதியில் காலை 9 மணிக்கு நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா். அதன் பிறகு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காலை 10 மணிக்குப் பாா்வையிட்டு, ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா்களுக்கு மரியாதை செய்கிறாா்.