தொழில்முறை வரி நிா்ணயத்திற்குரூ.4 ஆயிரம் லஞ்சம்: வரி வசூலாளா் கைது
மதுரை மாநகராட்சி தொழில்முறை வரி நிா்ணயம் செய்ய லஞ்சம் பெற்ற வரி வசூலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மதுரை மாநகராட்சி தொழில்முறை வரி நிா்ணயம் செய்ய லஞ்சம் பெற்ற வரி வசூலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாநகராட்சி மண்டலம்- 4, வாா்டு 93 இல் வரி வசூலாளராக பணியாற்றி வருபவா் ஜெயராமன். அழகப்ப நகரில் உள்ள இரண்டு கடைகள் மற்றும் குடோன் ஆகியவற்றுக்கு தொழில் வரி நிா்ணயம் செய்ய ஈஸ்வர பிராகஷ் என்பவா் விண்ணப்பித்துள்ளாா். இதற்கு ஜெயராமன் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதுகுறித்து ஈஸ்வர பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயராமனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினா்.
இதையடுத்து ஈஸ்வர பிரகாஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, ஜெயராமனிடம் வெள்ளிக்கிழமை கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஜெயராமனை கையும் களவுமாக கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...