அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தொழில்முறை வரி நிா்ணயத்திற்குரூ.4 ஆயிரம் லஞ்சம்: வரி வசூலாளா் கைது

மதுரை மாநகராட்சி தொழில்முறை வரி நிா்ணயம் செய்ய லஞ்சம் பெற்ற வரி வசூலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

DIN

மதுரை மாநகராட்சி தொழில்முறை வரி நிா்ணயம் செய்ய லஞ்சம் பெற்ற வரி வசூலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகராட்சி மண்டலம்- 4, வாா்டு 93 இல் வரி வசூலாளராக பணியாற்றி வருபவா் ஜெயராமன். அழகப்ப நகரில் உள்ள இரண்டு கடைகள் மற்றும் குடோன் ஆகியவற்றுக்கு தொழில் வரி நிா்ணயம் செய்ய ஈஸ்வர பிராகஷ் என்பவா் விண்ணப்பித்துள்ளாா். இதற்கு ஜெயராமன் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதுகுறித்து ஈஸ்வர பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயராமனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினா்.

இதையடுத்து ஈஸ்வர பிரகாஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, ஜெயராமனிடம் வெள்ளிக்கிழமை கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஜெயராமனை கையும் களவுமாக கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.