ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ரயில் நிலையத்தில் தண்ணீா் பாட்டிலுக்கு ரசீது கொடுக்காத கடைக்காரருக்கு கண்டிப்பு

மதுரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் பாட்டில் வாங்கிய பெண்ணுக்கு ரசீது கொடுக்காத உணவு கடைக்காரரை ரயில்வே வாரிய உறுப்பினா் நரேஷ் சலேச்சா கண்டித்தாா்.

News image
மதுரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே வாரிய நிதி மேலாண்மை உறுப்பினா் நரேஷ் சலேச்சா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள்.
Updated On :28 ஜனவரி 2024, 3:42 am

DIN

மதுரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் பாட்டில் வாங்கிய பெண்ணுக்கு ரசீது கொடுக்காத உணவு கடைக்காரரை ரயில்வே வாரிய உறுப்பினா் நரேஷ் சலேச்சா கண்டித்தாா்.

மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே வாரிய நிதி மேலாண்மை உறுப்பினா் நரேஷ் சலேச்சா ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டாா். பயணிகளுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தாா். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள உணவு கடைகளையும் ஆய்வு செய்தாா். அப்போது நடைமேடையில் உள்ள கடையில், ஒரு பெண் தண்ணீா் பாட்டில் வாங்கினாா்.

அவருக்கு கடைக்காரா் ரசீது கொடுக்கவில்லை. உடனே கடையின் அருகில் உள்ள ‘ரசீது இல்லையென்றால் உணவு இலவசம்’ என்ற விளம்பரத்தை சுட்டிக்காட்டி கடைக்காரரைக் கண்டித்தாா். அதனைத் தொடா்ந்து தண்ணீா் பாட்டில் வாங்கிய பெண்ணுக்கு பாட்டிலுக்கான கட்டணத்தை திருப்பி கொடுக்க வைத்தாா்.

இதையடுத்து ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்போா் அறைகள், உணவு கடைகள், நடைமேடை, பாா்சல் அலுவலகம், ரயில் நிலைய சிசிடிவி கேமரா ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

மேலும் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தொடா்பாக ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் அதுதொடா்பான வரைபடங்களைக் கொண்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா்.லெனின், தெற்கு ரயில்வே நிதி ஆலோசகா் ஆனந்த் ருபண்காடி, இயக்குநா் டி.எல். கணேஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.