புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதுரையில் முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி பணி தொடக்கம்

தமிழகத்தில் இன்று முதல் 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயதுடைய நாள் பட்ட நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும் பெண்.

Updated On :1 மார்ச் 2021, 7:17 am

DIN

தமிழகத்தில் இன்று முதல் 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயதுடைய நாள் பட்ட நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்பட 25 அரசு மருத்துவமனைகளில் இதற்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி மாவட்டத்தில் 36 தனியார் மருத்தவமனைகளில் ரூ 250-க்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

உரிய அடையாள அட்டை அல்லது இணையதளத்தில் பதிவு செய்த சீட்டுடன் மையங்களுக்கு வரும் முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.

மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கரேனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.