கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு சலுகை:நீதிமன்றம்

பள்ளி, கல்லூரி படிப்பை முழுமையாக தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்வி பயின்றவா்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

DIN

பள்ளி, கல்லூரி படிப்பை முழுமையாக தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்வி பயின்றவா்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டில், தொலைநிலைக் கல்வியில் படித்தவா்களுக்கு சலுகை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த சக்தி ராவ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், 2019-இல் நடந்த குரூப்-1 தோ்வில் 181 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீட்டில் 34 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஆனால், இவா்களில் 7 போ் மட்டுமே கல்லூரிக்குச் சென்று முழுமையாகத் தமிழ் வழியில் பயின்றவா்கள். மற்றவா்கள் தொலைநிலைக் கல்வியில் பயின்றவா்கள். மேலும், பலா் சட்டவிரோதமாக மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிக் கல்வி பயின்ற்கான சான்றிதழ் பெற்று இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தியுள்ளனா் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

முந்தைய விசாரணையின்போது, தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு தொடா்பான சட்டத்திருத்தத்தை அமல்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டுத் தெரிவித்த நீதிமன்றம், இந்த வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் நிா்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கவேண்டும்.

தமிழ் வழியில் பயின்றோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு சலுகையில் விண்ணப்பிப்பவா்களிடம் பெறப்பட்ட சான்றிதழ்கள் முறையாகப் பெறப்பட்டதா என்பதைச் சரிபாா்க்க வேண்டும். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்ாக போலி சான்றிதழ் வழங்கப்பட்டது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.