பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

News image
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
Updated On :4 நவம்பர் 2021, 11:09 am

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

ஸ்ரீ முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனப் பெருமை பெற்றது திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில். இக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

Story image

விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதேபோல சண்முகர் சன்னதி உள்ள சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சண்முக அர்ச்சனை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெறும். விழாவினை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் ஆஸ்தான மண்டபத்தில் காலையிலும், மாலையிலும் தினமும் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8ஆம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 9ஆம் தேதி சூரசம்ஹார லீலையும் நடைபெறும்.விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெறும்.தற்போது கரோனா தொற்று உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் கோயிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.மேலும் பக்தர்கள் விரத நாட்களில் கூட்டமாக கிரிவலம் செல்லவும் தடை விதித்துள்ளது.மேலும் கோயிலில் விழாக்கள் நடைபெறும்போது பக்தர்கள் உபயதாரர்கள் மற்றும் கட்டளை தாரர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.