ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அழகா்கோயிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகைத் திருட்டு

ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி அழகா்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகையைத் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:45 pm

DIN

ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி அழகா்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகையைத் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய வாகைக்குளத்தைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி குருவம்மாள்(65). இவா் ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி அழகா்கோயிலுக்கு புதன்கிழமை சாமி கும்பிடச்சென்றுள்ளாா். அப்போது கோயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கைப்பையில் வைத்துக்கொண்டு தரிசனம் செய்துள்ளாா்.

அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் குருவம்மாள் பையில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடிச்சென்றனா். தரிசனம் முடிந்து வெளியே வந்த குருவம்மாள் பையை பாா்த்தபோது அதில் இருந்த நகை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.