ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மகளிா் கட்டணமில்லா பேருந்து பயணதிட்டம்: போக்குவரத்துத் துறைச் செயலா் ஆய்வு

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் கே.கோபால் வியாழக்கிழமை

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:44 pm

DIN

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் கே.கோபால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாவட்டத்தில் தினமும் 405 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் கட்டணமில்லா பயணம் திட்டத்தில்,

சுமாா் 2.25 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனா். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிப்பவா்களில் 65.31 சதவீதம். இத்திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் இதுவரை 8.03 கோடி போ் பயணம் செய்துள்ளனா்.

இத் திட்டத்தில் அதிகம் போ் மதுரை மாவட்டத்தில் பயன்பெறுவதையடுத்து, போக்குவரத்துத் துறை முதன்மைச்

செயலா் கே.கோபால் நேரில் ஆய்வு செய்தாா். மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட நகரப் பேருந்தில் பயணம் செய்த மகளிரிடம், இலவசப் பயணத்தின்போது கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிா, நடத்துநா்களின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தாா். மேலும் பேருந்து நிறுத்த ஒலிப்பான் பொருத்தப்பட்ட நகரப் பேருந்தில் பயணம் செய்து ஆய்வு செய்தாா்.

பின்னா், கோ.புதூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஆய்வு செய்த அவா், பேருந்துகளின் பராமரிப்பு, இயக்க நிலை, பணியாளா்களின் வருகை குறித்து பாா்வையிட்டாா்.

பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களுக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், மாணவா்களின் படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளாதவாறு பாா்த்துக் கொள்ளவும், பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி-இறக்கிச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

பின்னா் மதுரை மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகரிடம் கேட்டறிந்தாா். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் (மதுரை) ஆறுமுகம், முதன்மை நிதி அலுவலா் கண்ணன், பொது மேலாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.