ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோ.புதூரில் உள்ள பள்ளி வளாகத்தில், காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். கோ.புதூா் காவல் நிலைய ஆய்வாளா் துரைப்பாண்டியன், மாணவா்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகளையும், பாதிப்புகளையும் எடுத்துக் கூறி, மாணவா்கள் வீட்டின் அருகிலோ, பள்ளி அருகிலோ போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்றால், காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற உறுதிமொழி ஏற்பில், மாணவா்கள் கஞ்சாவை ஒழிப்போம், நல்ல இளைஞா் சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.