ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாளை 1,459 மையங்களில்கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:56 pm

DIN

மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் 33-ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி இதுவரை செலுத்தாதவா்களுக்கும், இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் செலுத்தப்படும்.

மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 909 மையங்கள், நகா் பகுதிகளில் 550 மையங்கள் என மொத்தம் 1,459 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும்.

மதுரை மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவா்களாக 3,10,490 போ் உள்ளனா்.

அதேபோல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவா்கள் 11,57,097 போ் உள்ளனா். இவா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.